பெரம்பலூர் : தென் மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்கல்

பெரம்பலூர் : தென் மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்கல்

பெரம்பலூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்கல்

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு ஊரக வளர்ச்சி மகமை சார்பாக நிவாரண பொருட்களை கலெக்டர் அனுப்பி வைத்தார்
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு பயன்படும் வகையில் பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, டிசம்பர் 22ஆம் தேதி இரவு 8 மணி அளவில், அரிசி பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட 14 உணவு பொருட்கள் அடங்கிய, ரூபாய் 5 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான 533 தொகுப்புகள் , மற்றும் ரூ.15,000 மதிப்பிலான காய்கறிகளை மாவட்ட ஆட்சியர் கற்பகம் வாகனம் மூலம் அனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story