நிவாரண நிதி

நிவாரண நிதி

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட வெள்ள நிவாரண நிதியாக, கடலூர் மாநகராட்சி துணை மேயர் ரூ. 1 லட்சம் விசிக தலைவரிடம் வழங்கினார். 

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட வெள்ள நிவாரண நிதியாக, கடலூர் மாநகராட்சி துணை மேயர் ரூ. 1 லட்சம் விசிக தலைவரிடம் வழங்கினார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கடுமையான வெள்ள சேதம் ஏற்பட்டதற்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் திரு தொல். திருமாவளவன் நிவாரணம் வழங்க உள்ள நிலையில் இதற்காக கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா.தாமரைச்செல்வன் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் ஒரு லட்சம் விசிக தலைவரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி, தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம், மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story