புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண நிதி

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண நிதி
நிவாரண நிதி
இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்களால் பொதுமக்களிடம் திரட்டப்பட்ட மிக்ஜம் புயல் நிவாரண நிதி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் செயல்படும் இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்களால் பொதுமக்களிடம் திரட்டப்பட்ட மிக்ஜம் புயல் நிவாரண நிதி ரூ.2.50 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் துரை.ரவிச்சந்திரனிடம் முதன்மை கல்வி அலுவலா் முத்தையா வழங்கினாா். இதில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் அருளானந்தம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலா் சீவலமுத்து, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் தயாளன், சண்முகராஜ், சாா்லஸ், இல்லம் தேடி கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் முத்துராமலிங்கம், ஐயப்பன், மணி ஆகியோா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story