சேலம் மாநகராட்சி சார்பில் நிவாரண நிதி: ஆணையாளர் பாலச்சந்தர் தகவல்

சேலம் மாநகராட்சி சார்பில் நிவாரண நிதி: ஆணையாளர் பாலச்சந்தர் தகவல்

மாநகராட்சி ஆணையாளர்

சேலம் மாநகராட்சி சார்பில் ரூ.31.50லட்சம் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது என ஆணையாளர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது, மிக்ஜம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொள்ள சேலம் மாநகராட்சி மேயர், துணைமேயர் மற்றும் அனைத்து மாமன்ற உறுப்பினர்களின் கடந்த மாதத்துக்கான மதிப்பூதியம் ரூ.6 லட்சத்து 25 ஆயிரம் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள்,

அலுவலர்கள் 1,621 பேரின் டிசம்பர் மாதத்தில் இருந்து ஒரு நாள் ஊதியம் ரூ.25 லட்சத்து 35 ஆயிரத்து 37 பிடித்தம் செய்து மொத்தம் ரூ.31 லட்சத்து 60 ஆயிரத்து 37-யை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story