உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கல்!

உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கல்!

தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 குழந்தைகளின் பெற்றோருக்கு முதல்வரின் ரூ.3 லட்சம் நிவாரண நிதியுதவியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார். 

தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 குழந்தைகளின் பெற்றோருக்கு முதல்வரின் ரூ.3 லட்சம் நிவாரண நிதியுதவியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார். 
தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி அருகே உள்ள நீராவி குளத்தில் மூழ்கி சந்தியா, கிருஷ்ணவேணி மற்றும் செல்வன் என மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர். குழந்தைகள் மூவரும் உறவினருடன் குளத்தில் குளிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த நிலையில், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த ரூ.3லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை குழந்தைகளின் பெற்றோரிடம் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வழங்கி ஆறுதல் கூறினார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகைய்யா, மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story