தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

நிதியுதவி 

விழுப்புரம் மாவட்டம் இருளுரில் நடைபெற்ற தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி சிவக்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியம் இரும்புலி கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன், ஞானசவுந்தரி ஆகியோரின் கூரை வீடுகள் தீ விபத்தில் எரிந்து சேதமானது. இதுபற்றி அறிந்த மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. சிவக்குமார் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவர் அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களையும் அவர்களுக்கு வழங்கினார்.

அப்போது, பா.ம.க. மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர் ஹரி கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் கமலா மற்றும் கட்சி நிர்வாகிகள் கண்ணன், கன்னியப்பன், சேட்டு, கலைச்செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story