தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி உதவி

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு நகர்மன்ற தலைவர் நிவாரண உதவி வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட கரட்டுப்பாளையம் போயர்த்தெரு பகுதியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பழனியப்பன் குடும்பத்தாரினை நகர மன்ற தலைவர் திருமதி நளினி சுரேஷ்பாபு அவர்கள் சந்தித்து நிவாரணத் தொகையினை வழங்கினார்.

நிகழ்ச்சியில் வட்டாட்சியர் விஜயகாந்த்,கிராம நிர்வாக அலுவலர் முத்துராஜ், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு மற்றும் அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், நகர்மன்ற உறுப்பினர் மகேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story