மிக்ஜாம் புயல் பாதிப்பு மக்களுக்கு ஐமுமுக சார்பில் நிவாரண பொருட்கள்

மிக்ஜாம் புயல் பாதிப்பு மக்களுக்கு ஐமுமுக சார்பில் நிவாரண பொருட்கள்

நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு 

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில், மாவட்ட ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்களை விநியோகம் செய்ய கொண்டு செல்லும் நிகழ்வு மாவட்ட தலைவர் அக்பர் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு நகரதலைவர் யூசுப் முன்னிலை வகித்தார்.

மிக்ஜாம் புயல் பெருமழை காரணமாக, சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். பல தன்னார்வ அமைப்புகளும், சங்கங்களும் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றன. அந்த மக்களுக்கு உதவும் வகையில், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம், பொதுமக்கள், வியபாரிகளிடமிருந்து உதவிகளை சேகரித்தது. 500 க்கும் மேற்பட்ட கோரைப் பாய்கள், பெட்ஷீட்கள், தண்ணீர் பாட்டில்கள்,ரவை,மை தா,சேமியா,பிஸ்கெட் மற்றும் வாழைப்பழங்கள் உள்ளிட்ட 1.50 இலட்சம் மதிப்புள்ள மதிப்புள்ள நிவாரண பொருட்கள் ராயபுரம் சென்னை பகுதியில் உள்ள பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டன. இந்த பணியில், மாவட்டத் துணைச் செயலாளர் முஜிபுர் ரகுமான். மாவட்ட தொழிற்சங்க செயலாளர் பிலால். நகரத் துணைச் செயலாளர் ஹயாத் பாஷா, நகர தொண்டர் அணி செயலாளர் ஆசிப், மருத்துவ அணி பாஷா உள்ளிட்ட ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story