தென் மாவட்டங்களுக்கு நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு

தென் மாவட்டங்களுக்கு நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு

நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க ஈரோடு மாவட்ட மையத்தின் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா வழிகாட்டுதலின்படி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் கடந்த 18.12.2023 முதல் பிஸ்கட் பாக்கெட்கள், குடிநீர் பாட்டில்கள், பருப்பு வகைகள், சர்க்கரை, உப்பு, தூள் பாக்கெட்கள், அரிசி, எண்ணெய், கோதுமை மாவு, பிரட் பாக்கெட்கள், சோப்புகள், போர்வைகள் மற்றும் துணி வகைகள் என பல்வேறு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க ஈரோடு மாவட்ட மையத்தின் சார்பில், தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.12,10,367 மதிப்பீட்டில் அரிசி, பருப்பு, மசாலா வகைகள், சர்க்கரை, தூள், உப்பு, கோதுமை ரவை, காபி பவுடர், போர்வைகள், துண்டுகள், நாப்கின்கள், குடிநீர் பாட்டில்கள், பிரட் பாக்கெட்கள், பிஸ்கட், பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்கள் அடங்கிய வாகனத்தை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.மணீஷ். கொடியசைத்து அனுப்பி வைத்தார். இதில் நாளது வரை சுமார் 14 வாகனங்கள் மூலமாக ரூ.1,17,21,216 மதிப்பீட்டிலான நிவாரண பொருட்கள் பல்வேறு கட்டங்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

Tags

Next Story