திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள்

திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ரூ.9,40,106- மதிப்பிலான பல்வேறு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு, ரூ.2,00,000- மதிப்பிலான பிரட், தண்ணீர் பாட்டில், பிஸ்கட், பால் பவுடர், கோதுமை, ரஸ்க், அரிசி, பாய், போர்வை, கைலிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களும், சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு ரூ.60,620- மதிப்பில் பிஸ்கட், ரஸ்க், பிரட், பால் பவுடர்,

தண்ணீர் பாட்டில், தீப்பெட்டி, மெழுகுவர்த்தி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களும், திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு ரூ.1,34,311- மதிப்பிலான தண்ணீர் பாட்டில், பிஸ்கட், பிரட் பாக்கெட்டுகள், பால் பவுடர், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, பிஸ்கட், நாப்கின் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களும், சிவகாசி வட்டாட்சியர் அலுவலகம்,

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் சிவகாசி மாநகராட்சி மூலம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.3,35,864- மதிப்பிலான பிரட், தண்ணீர் பாட்டில், பிஸ்கட், பால் பவுடர், அரிசி, துரித உணவு பொருட்கள், பாய், போர்வை, துண்டு, மெழுகுவர்த்தி, தீப்பெட்டிகள், கொசுவர்த்தி, நாப்கின் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களும், இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ரூ.10,36,780- மதிப்பிலான துணிகள், துண்டு, சேலைகள், பெண்களுக்கான உடைகள், கைலிகள், பனியன்கள், ஆண்களுக்கான உடைகள், கம்பளி, பிஸ்கட், ரஸ்க், தண்ணீர் பாட்டில், அரிசி, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களும், ராம்கோ நிறுவனம் மூலம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.75,000- மதிப்பிலான உணவுப் பொருட்களையும் என ஆக மொத்தம் ரூ.9,40,106- மதிப்பிலான பல்வேறு நிவாரணப் பொருட்கள் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story