பத்திரிகையாளர்கள் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள்

பத்திரிகையாளர்கள் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள்

நிவாரண பொருட்களை வழங்கிய பத்திரிகையாளர்கள் 

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவும் வகையில், வேலூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் சார்பில் ரூ.1,00,000/- மதிப்பிலான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியனிடம் வழங்கினார்கள். வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவுரையின் பேரில் தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்திலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பபட்டு வருகிறது. கடந்த 06.12.2023 முதல் 08.12.2023 வரை 17 வாகனங்களில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவும் வகையில் வேலூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் சார்பில் ரூ.1,00,000/- மதிப்பிலான நிவாரண பொருட்களை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியனிடம் வழங்கினார்கள்.

Tags

Next Story