வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் : விக்கிரமராஜா

வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் : விக்கிரமராஜா

நிவாரண உதவிகள் 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா நேற்று நிவாரண பொருட்களை வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது: தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளை கணக்கெடுத்து நிவாரணம் வழங்குவது போன்று வியாபாரிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.சிறிய பெட்டிக்கடையில் இருந்து சூப்பர் மார்க்கெட் வரையிலான கடைகளும் வெள்ளத்தில் சேதமடைந்து பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு மத்திய அரசு முத்ரா திட்டத்தின் கீழ் வட்டியில்லா கடனாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டமைப்பு தெற்கு மாவட்டத் தலைவர் காமராசு, சாத்தான்குளம் வியாபாரிகள் சங்கத் தலைவர் கண்ணன், செயலாளர் மதுரம் செல்வராஜ், பொருளாளர் இஸ்மாயில், சங்க ஆலோசகர் ஜெயபிரகாஷ், பேரூராட்சி கவுன்சிலர் லிங்கபாண்டி, நகை கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் முருகன், ஒன்றிய சமக செயலாலர் ஜான்ராஜா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story