கடலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு நிவாரணம்

கடலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு நிவாரணம்

நிவாரணம் வழங்கிய அமைச்சர்


சின்னத்துறை மீனவ கிராமத்தில் மீன்பிடித்த போது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டம், சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் லிரன்ஷோ என்பவர் ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட் கடற்பகுதியில் தங்கி ஆழ்கடலில் மீன்பிடித் தொழில் புரிந்து வந்தார். கடந்த 09.09.2023 அன்று மஸ்கட் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகிலிருந்து தவறி கடலில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 இலட்சம் வழங்கிட உத்தரவிட்டார்கள். இந்த நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி இன்று மீனவரின் வீட்டில் நடந்தது. குமரி சப்- கலெக்டர் கவுஷிக் தலைமை வகித்தார். கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நிவாரண உதவி வழங்கினார்.

Tags

Next Story