சுரண்டை அருகே மழையால் வீடு இடிந்தவருக்கு நிவாரணம்

சுரண்டை அருகே மழையால் வீடு இடிந்தவருக்கு நிவாரணம்
நிவாரணம் 
சுரண்டை அருகே மழையால் சேதமடைந்த வீட்டின் உரிமையாளருக்கு தமிழக அரசின் நிவாரண தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்களை அதிகாரிகள் வழங்கினர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை அருகேயுள்ள அச்சங்குன்றம் கிராமத்தைச் சோ்ந்த குழலாமணி என்பவரது வீடு திங்கள்கிழமை இரவு பெய்த கனமழையால் இடிந்து சேதமடைந்தது. இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் அந்தோணிச்சாமி அளித்த தகவலின் பேரில் வீரகேரளம்புதூா் வருவாய் வட்டாட்சியா் அழகப்பராஜா, அந்த வீட்டை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட குழலாமணிக்கு அரசின் முழு நிவாரணத்தொகை மற்றும் அத்தியாவசிய பொருள்களை வழங்கினாா்.

Tags

Next Story