திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி நிகழ்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் காந்தி நினைவு நாளை முன்னிட்டு திமுக சார்பாக மத நல்லிணக்க உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
ராமநாதபுரம் கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி மகாத்மா பலியான நாளான ஜனவரி 30-தேதி காந்தியடிகள் நினைவு நாளையொட்டி மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க வேண்டும் என முதல்வர் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பாக அரண்மனை முன்பு மத நல்லிணக்க உறுதி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர் கல்லித்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், முன்னிலையில் நடைபெற்றது. இதில், இந்திய தேசிய காங்கிரஸ்,இடது சாரிகள்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,விடுதலை சிறுத்தை,மனிதநேய மக்கள் கட்சியினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதில், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி,நாடாளு மன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி,மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இன்பா ரகு,மகளிரணி துணைத்தலைவர் எம்.எஸ்.கே.பவானிராஜேந்திரன் மற்றும் காங்கிரஸ் கட்சி மாவட்ட பொருப்பாளர்கள் ராஜாராம் பாண்டியன்,செல்லத்துறை அப்துல்லா, இராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர். கே .கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம் மாவட்டத் துணைச் செயலாளர் கே கருப்பையா, செயற்குழு உறுப்பினர் மிசா அகமது தம்பி, பிரவீன் தங்கம், பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, நகர துணைத் தலைவர் குணசேகரன்,நகர் செயலாளர் ஜீவரத்தினம், ஒன்றிய செயலாளர்கள் கே.ஜே.பிரவீன்,முத்துக்குமார், உதயகுமார், சண்முகநாதன், மாயகிருஷ்ணன், ஜெயக்குமார், மற்றும் கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது, முதுகுளத்தூர் நகரச் செயலாளர் ஷாஜகான், மற்றும் கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story