ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்
 சிவகாசி அருகே திருத்தங்கல் மண்டலத்தில் வாறுகால் (கழிவுநீர் கால்வாய்) கட்டுவதற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
சிவகாசி அருகே திருத்தங்கல் மண்டலத்தில் வாறுகால் (கழிவுநீர் கால்வாய்) கட்டுவதற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

விருதுநகர் மாவட்டம்,சிவகாசி அருகே திருத்தங்கல் மண்டலத்தில் வாறுகால் கட்டுவதற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

சிவகாசி மாநகராட்சியில் திருத்தங்கல் மண்டலத்தில் 21வது வார்டில் கே.கே நகரில் புதிய வாறுகால் அமைக்கப்பட உள்ளன.இந்த பகுதியில் வாறுகால் அமைக்க இடையூராக ஏராளமான ஆக்கிரமிப்பு சுவர்கள் இருந்தன.ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.அதனை தொடர்ந்து கே.கே நகரில் வாறுகால் அமையும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஜேசிபி உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.ஆக்கிரமி்பபு அகற்றும் பணிகளை நகர அமைப்பு அலுவலர் ராஜசேகரன்,நகர அமைப்பு ஆய்வாளர் கார்த்திகேயன், மேற்பார்வையாளர் முத்துராஜ் பார்வையிட்டனர்.

Tags

Next Story