வெப்படை பேருந்து நிறுத்தத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வெப்படை பேருந்து நிறுத்தம் அருகே ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த கடைகளாய் அதிகாரிகள் அகற்றினர்.
பள்ளிபாளையம் சங்ககிரி சாலை வெப்படை பேருந்து நிறுத்த பகுதி அருகே அதிகளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தற்காலிக கடையில் அமைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் சமூக ஆர்வலர்கள் இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்த தகவல் வெப்படை காவல் நிலையத்திற்கு சென்றது. வெப்படை போலீசார் ஆக்கிரமிப்பு செய்த நபர்களையும் கடைகளையும் அப்புறப்படுத்தினர் . அனுமதியின்றி ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.

Tags

Next Story