கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆக்கிரமிப்புகள் அகற்றம் 

திருப்போரூர் கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் வட்டம் திருப்போரூா் அருள்மிகு கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பு அகற்றும் பொருட்டு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 13. 44 ஏக்கா் சென்ட் நிலத்தில் செங்கல்பட்டு உதவி ஆணையா் லட்சுமி காந்தபாரதிசாதன் திருக்கோயில் நிலங்கள் வட்டாட்சியா்,

செயல் அலுவலா் குமரவேல், மேலாளா் வெற்றி நில அளவையா் திருக்கோயில் பணியாளா்கள் மற்றும் பாரதிய வித்யா பவன் பணியாளா் ஆகியோருடன் மேற்படி இடத்தினை புலத் தணிக்கை செய்தும் அளவீடு செய்தும் திருக்கோயில் நிலம் என்பதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து கோயில் இடத்தில் உள்ள ஆக்கமிரமிப்புகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி சுத்தம் செய்யும் பணி கோயில் நிா்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story