மீன் கடைகள் அகற்றம் - வியாபாரிகள் காவல்துறையினருடன் வாக்குவாதம்.

மீன் கடைகள் அகற்றம் - வியாபாரிகள் காவல்துறையினருடன் வாக்குவாதம்.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீனவ மக்கள் 
சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் இருந்த மீன் கடைகளை முன்னறிவிப்பின்றி சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியதாக கூறி மீன் விற்பனை செய்யும் வர்த்தகர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் அங்கு வசியக்கூடிய மக்கள் சாலை ஓரங்களில் மீன் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர், இந்நிலையில் நேற்று காலையில் மாநகராட்சி ஊழியர்கள் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி தங்கள் கடைகளை அப்புறப்படுத்தியதாகவும் இதனால் தங்களுக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரம் பாதிக்கப்பட்டதாகவும் கூறி மீனவ மக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். லூப் சாலையில் பாதுகாப்புக்காக சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

Tags

Next Story