செங்கல்பட்டு அருகே ஆக்கிரமிக்கப்பட்ட கடைகள் அகற்றம்: போலீசார் எச்சரிக்கை

செங்கல்பட்டு அருகே ஆக்கிரமிக்கப்பட்ட கடைகள் அகற்றம்: போலீசார் எச்சரிக்கை
ஆக்கிரமிக்கப்பட்ட கடைகள் அகற்றம், போலீசார் எச்சரிக்கை
ஆக்கிரமிக்கப்பட்ட கடைகள் அகற்றம், போலீசார் எச்சரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அடுத்த மெல்ரோசாபுரம் திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பை ஒட்டி உள்ள சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து, ஹோட்டல்கள், தள்ளுவண்டி கடைகள், வாகனங்கள் பழுது நீக்கம் செய்யும் கடை வைக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.

இதன் காரணமாக, சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கி வந்தனர். இதையடுத்து, நேற்று காலை மறைமலை நகர் போக்குவரத்து போலீசார், சர்வீஸ் சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த கடைகளை அகற்றினர்.

அதோடு, சாலையில் கொட்டப்பட்டு இருந்த விறகு கட்டைகள்,எம் - சாண்ட் மணல் குவியல்களை, ஜே.சி.பி., இயந்திரம் கொண்டு அப்புறப்படுத்தினர். மீண்டும் சாலையை ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அப்போது போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story