கொடையில் விபத்தை ஏற்படுத்தும் கம்பங்களை அகற்றும் பணி

கொடையில் விபத்தை ஏற்படுத்தும் கம்பங்களை அகற்றும் பணி

சேதமடைந்துள்ள மின் கம்பம்

கொடையில் விபத்தை ஏற்படுத்தும் கம்பங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொடைக்கானல் பஸ் ஸ்டாண்ட் போலீஸ் அவுட் போஸ்ட் அருகே போலீஸ் டிராபிக் சிக்னல் கம்பத்துடன் கூடிய விளம்பர பதாகை சரிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி தாஸ் 55, பலியானார். சுரேஷ் காயமடைந்து சிகிச்சையில் உள்ளார்.

இதையடுத்து கொடைக்கானல் நகராட்சி பகுதிகளில் ரோட்டோரம் ,பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் அமைக்கப்பட்ட விளம்பர பதாகைகள், கம்பங்கள் ,டிராபிக் சிக்னல் கம்பங்கள், விளம்பர பதாகைகள் அமைப்பதற்காக ஊன்றப்பட்ட கம்பங்களை அகற்றும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story