அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றம்

அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றம்

கொடிக்கம்பங்கள் அகற்றம் 

தாராபுரத்தில் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால் அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் அடுத்த மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகளும் அமலில் உள்ளது. எனவே அரசியல் கட்சி கொடி கம்பம், பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது அரசு பொதுச் சுவர்களில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சித் தலைவரின் படங்கள், கட்சி சின்னங்கள், கொடிகள் போன்றவை வரையப்பட்டிருந்தால் அவற்றை நகராட்சி ஊழியர்கள் அகற்றி விடுகிறார்கள்.

அரசியல் தலைவர்களின் சிலைகளும் மறைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அண்ணா சிலை, காந்தி சிலை, உடுமலை ரோட்டில் உள்ள பெரியார் சிலை, ஐந்து சாலை சந்திப்பில் நூலகம் அருகே கட்சியினர் சுவர் விளம்பரங்கள், மேலும் வார்டு பகுதியில் உள்ள கல்வெட்டுக்கள் மற்றும் கட்சி கொடிகள், கொடிக்கம்பங்கள் அகற்றி வருகின்றனர். தாராபுரம் பழைய நகராட்சி பகுதியில் சுற்றி உள்ள 50க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு அகற்றியதால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

Tags

Next Story