மேம்பாலம் கட்டுமான பணி- ஆக்கிரமிப்பு செய்யபட்ட வீடுகள் அகற்றம்!

மேம்பாலம் கட்டுமான பணி- ஆக்கிரமிப்பு செய்யபட்ட வீடுகள் அகற்றம்!

ஆக்கிரமிப்பு வீடுகள்

மேம்பால கட்டுமான பணிகள் தொடங்கவுள்ளா நிலையில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

கோவை-உக்கடம் ஆத்துப்பாலம் இடையே மேம்பால பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உக்கடத்தில் இருந்து வாலாங்குளம் செல்ல இறங்கு தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அரசு போக்குவரத்து கழக அலுவலக சுற்று சுவர் மேம்பால பணிக்காக இடிக்கப்பட்டது.

இந்நிலையில் உக்கடம்- வாலாங்குளம் பகுதியில் இருந்த இருபது வீடுகள் உட்பட 40 கட்டிடங்கள் அகற்றப்பட்டது.கோவை மாநகராட்சி மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கட்டிடங்கள் இடிக்கப்படும் பணியானது நடைபெற்ற நிலையில் இப்பகுதியில் மேம்பால பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story