நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற கே. எஸ் அழகிரி கோரிக்கை

நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற கே. எஸ் அழகிரி கோரிக்கை
நிவாரணம் வழங்கல்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினர்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், வடிவீஸ்வரம் அரசு பள்ளியில் வைத்து காங்கிரஸ் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விஜய் வசந்த் எம்.பி. ஏற்பாட்டில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு கே.எஸ். அழகிரி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. இதேபோன்று நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு காரணமாக வெள்ள பாதிப்புகள் ஒவ்வொரு முறையும் ஏற்பட்டு வருகிறது. இது இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே நிலைதான் உள்ளது. எனவே தமிழக அரசு இதனை ஒரு முக்கிய பிரச்சினையாக கருதி நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஓராண்டுக்குள் ஆக்கிரமிப்புகளை நீர் நிலைகளில் இருந்து அகற்றி வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story