அகற்றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைக்க வேண்டும்

அகற்றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைக்க வேண்டும்

வேகத்தடை

அகற்றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை.
அச்சிறுபாக்கத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலை பகுதியில், விபத்தை தவிர்க்கும் வகையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. இதனால், இருசக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மெதுவாக சென்று வந்தன. சில நாட்களுக்கு முன், தமிழக முதலமைச்சரின் கான்வாய் வாகனம், விழுப்புரம் பகுதிக்கு செல்வதற்காக, தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கனரக வாகனங்களை சோத்துப்பாக்கம், அச்சிறுபாக்கம் பகுதி புறவழிச்சாலையில், போலீசார் நிறுத்தி வைத்தனர். இதன் காரணமாக, வேகத்தடைகள் அகற்றப்பட்டன. தற்போது, அகற்றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படாமல் உள்ளதால், இரு சக்கர வாகன ஓட்டிகள், அப்பகுதியில் வேகமாக செல்கின்றனர். இதனால், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, புறவழிச் சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை, மீண்டும் அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story