நவீன தொழில்நுட்பத்தில் அரசு பள்ளிகள் புனரமைப்பு

நவீன தொழில்நுட்பத்தில் அரசு பள்ளிகள் புனரமைப்பு

 திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, அம்பத்துார் உள்ளிட்ட கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் பழமை மாறாமல் நவீன தொழில்நுட்பத்தில் புனரமைக்கப்பட்டுள்ளன.  

திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, அம்பத்துார் உள்ளிட்ட கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் பழமை மாறாமல் நவீன தொழில்நுட்பத்தில் புனரமைக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு ஆரம்ப, நடுநிலை மற்றும் மேல்நிலை என, 1,335 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, அம்பத்துார் உள்ளிட்ட கல்வி மாவட்டங்களில், செயல்பட்டு வரும் இப்பள்ளிகளில் பெரும்பாலானவை, பழமை வாய்ந்தவையாக உள்ளன. சில இடங்களில், 50க்கும் மேற்பட்ட ஆண்டுகள் கடந்த, பழமை வாய்ந்த கட்டடங்களில் பள்ளிகள் இயங்கி வருகின்றன. முறையான பராமரிப்பு இன்மை காரணமாக, இந்த கட்டடங்கள் பாழடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளன.

பழமையான கட்டடங்களில் செயல்பட்டு வரும் பள்ளி கட்டடங்கள் வலுவாகவும், கூரை, மங்களூர் ஓடு வேயப்பட்டதாகவும் உள்ளது. கட்டடம் வலுவாக இருந்தாலும், கூரை ஓடுகள் உடைந்து மழைநீர் உட்புகுவதால் மாணவர்கள் அவதிப்படும் நிலை உள்ளன. அவ்வப்போது உடையும் ஓடுகளை தொடர்ந்து சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தவறும்பட்சத்தில், மழை காலத்தில் மாணவர்கள், அவதிப்பட்டு வருகின்றனர். பழமையான இந்த கட்டடங்களின் சுவர்கள், ஒன்றரை அடி அகல சுவர் மற்றும் வலுவான துாண்களுடன் கட்டப்பட்டுள்ளன.

பெரும்பாலான இடங்களில், கருங்கல் சுவர் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், அவற்றின் உறுதித்தன்மை வலுவாக இருப்பினும், மங்களூர் ஓடுகள் கிடைக்காததால், அவற்றை புதுப்பிக்க இயலாமல், பாழடைந்து காட்சியளிக்கிறது. இந்த நிலையில், சிறந்த உறுதித்தன்மை கொண்ட பழமையான கட்டடங்களில், அவற்றை முழுதும் இடித்து அகற்றாமல், நவீன தொழில்நுட்பத்தில், எளிமையான முறையில் அவற்றை புனரமைப்பு செய்துள்ளனர்.

Tags

Next Story