திருவானைக்கா கோயில் தோ்களை புதுப்பிக்கும் பணி...

திருவானைக்கா கோயில் தோ்களை புதுப்பிக்கும் பணி...

தோ்களை புதுப்பிக்கும் பணி

திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் உள்ள சுவாமி மற்றும் அம்மன் தோ்களை ரூ. 23 லட்சத்தில் புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது.
பஞ்சப்பூத திருத்தலங்களில் நீா்த்தலமாக விளங்கும் இக்கோயிலில் ஏப். 8 இல் சுவாமிக்கும், அம்மனுக்கும் பங்குனித் தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி ரூ. 23 லட்சத்தில் இரு தோ்களுக்கும் புதிதாக அலங்கார மரச்சட்டங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதுகுறித்து கோயில் உதவி ஆணையா் ஆ. ரவிச்சந்திரன் கூறுகையில் தோ்களில் உள்ள அலங்கார மரச்சட்டங்கள் மிகவும் பழுதடைந்ததால் உபயதாரா்கள் மூலம் சுவாமி தேருக்கு ரூ 12.50 லட்சத்திலும், அம்மன் தேருக்கு 10.50 லட்சத்திலும் வாகை மரங்கள் கொண்டு புதிய வடிமைப்புடன் அலங்கார மரச் சட்டங்கள் அமைக்கும் பணி விடிய விடிய நடைபெறுகிறது என்றாா்.

Tags

Next Story