உத்திரமேரூர் அருகே சேதமான சாலைகள் சீரமைப்பு

உத்திரமேரூர் அருகே  சேதமான சாலைகள் சீரமைப்பு


உத்திரமேரூர் -புக்கத்துறை இடையிலான குண்டும் குழியுமான சாலை சீரமைக்கும் பணி நடந்தது.


உத்திரமேரூர் -புக்கத்துறை இடையிலான குண்டும் குழியுமான சாலை சீரமைக்கும் பணி நடந்தது.

கடந்த பருவ மழைக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதி சாலைகள் சேதமானது. அதில் ஒன்றாக உத்தரமேரூரில் இருந்து, புக்கத்துறை செல்லும் சாலையில் குறிப்பிட்ட சில இடங்கள் பழுதடைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறியது. இதனால், இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே, இச்சாலையை சீரமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன்படி, உத்திரமேரூர் -புக்கத்துறை இடையிலான குண்டும் குழியுமான சாலை பகுதிகள், நெடுஞ்சாலைத் துறை சார்பில் தார் ஊற்றி சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது."

Tags

Next Story