பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய தலைவர்

பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய தலைவர்

பழுதடைந்த சாலைகள் சீரமைப்பு

பழுதடைந்த சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து சாலைகள் சீரமைக்கப்பட்டன.

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம் அரசிராமணி பேரூராட்சிக்குட்பட்ட குள்ளம்பட்டி பாரதி நகர், செட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி தலைவரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கை ஏற்று அப்பபகுதிகளில் தமிழக அரசு சார்பில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதனை அரசிராமணி பேரூராட்சி தலைவர் காவேரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது பேரூராட்சி துணைத்தலைவர் கருணாநிதி உட்பட பலரும் உடன்னிருந்தனர்.

Tags

Next Story