கபிலர்மலையில் லாரி மோதி சேதம் அடைந்த மின் கம்பம் மாற்றம்.

கபிலர்மலையில் லாரி மோதி சேதம் அடைந்த மின் கம்பம் மாற்றம்.

பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலையில் லாரி மோதி சேதம் அடைந்த மின் கம்பத்தை  மின்சார வாரியம் மாற்றயது.


பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலையில் லாரி மோதி சேதம் அடைந்த மின் கம்பத்தை  மின்சார வாரியம் மாற்றயது.

பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை அரசு தொடக்கப்பள்ளியின் எதிரே சாலையின் ஓரத்தில் இரும்பால் ஆன மின் கம்பம் நடப்பட்டு இருந்தது. இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லாரி ஒன்று எதிர்பாரா விதமா கம்பத்தில் மோதிவிட்டது. இதில் கம்பம் சாய்ந்த நிலையில் கம்பத்தில் இருந்து மின்சாரம் செல்லும் கம்பிகள் கீழே தொங்கிய நிலையில் இருந்தது.

பள்ளியின் அருகே இருந்ததால் பள்ளி குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் சாலையில் செல்லும் பேருந்தில் மோதும் நிலையில் இருந்ததால் இதனை வேறு கம்பம் மாற்றி அமைக்க வேண்டும் என பல நாட்களாக மின்சார வாரியத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று நேற்று வேறு கம்பம் மாற்றி அமைக்கப்பட்டது.

Tags

Next Story