நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் குடியரசு விழா!

நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் குடியரசு விழா! நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு நகர் மன்ற தலைவர் து.கலாநிதி தலைமையில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு நகராட்சி ஆணையாளர் கா.சென்னுகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நகராட்சி துணை தலைவர் செ.பூபதி வரவேற்றார்.

விழாவில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு நகர் மன்ற கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதன் பிறகு நாமக்கல் மெயின் ரோட்டில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை, பஸ் நிலையம் எதிரில் நேரு பூங்காவில் உள்ள நேரு மற்றும் காமராஜர் சிலை மற்றும் உழவர் சந்தை அருகில் உள்ள மகாத்மாகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Tags

Next Story