குடியரசு தினம் : செஞ்சி பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு சோதனை

குடியரசு தினம் : செஞ்சி பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு சோதனை

வெடிகுண்டு சோதனை 

குடியரசு தினத்தையொட்டி செஞ்சியில் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் மோப்ப நாய் உதவியோடு வெடிகுண்டு சோதனை நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேருந்து நிலையம், நான்கு முனை சந்திப்பு, காந்தி பஜார் திருவண்ணாமலை சாலை உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களான பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் தமிழுடன் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். வருகின்ற 26 ஆம் தேதி குடியரசு தினம் நடைபெற உள்ள நிலையில் மக்கள் அதிகம் கூட்டமாக உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சுவச் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் தமிழ்யுடன் சோதனையில் ஈடுபட்டனர். இந்த திடீர் சோதனையால் செஞ்சி பேருந்து நிலையம் காந்தி பஜார் பகுதியில் பரபரப்பு நிலவியது.குடியரசு தினம் : செஞ்சி பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு சோதனை

Tags

Next Story