குடியரசு தினவிழா கொண்டாட்டம்

நாமக்கல்லில் 75வது குடியரசு தினவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள, மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடியரசு தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். குடியரசு தின விழாவை கொண்டாடும் வகையில் மாவட்ட ஆட்சியர் உமா, மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் ஆகியோர் வெண் புறாக்களையும், வண்ண பலூன்களையும் வானில் பறக்க விட்டனர். பின்னர், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையிலும், அவர்களது வாரிசுதாரர்களை சிறப்பு செய்யும் வகையிலும், அவர்களுக்கு கதர் ஆடை அணிவித்து ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்.

Tags

Next Story