செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழா

செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழா

குடியரசு தின விழா 

செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த 75 வது குடியரசு தின விழாவில் எம்.எல்.ஏ ஜோதி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் நடந்த 75 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்கு செய்யாறு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பாபு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பரணிதரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ ஜோதி பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தினார். இந்நிகழ்வில் ஓன்றிய குழு உறுப்பினர்கள் ஞானவேல்,பாலகோபால், மகாராஜன், மகாலட்சுமிஅருள், அனுசுயாஞானசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story