ராசிபுரம் : குடியரசுதின விழா

நாமக்கல் மாவட்டம்,ராசிபுரத்தில் குடியரசுதின விழா வெகு விமர்சையாக கொண்டாட்டப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் ராசி அமுதசுரபி அறக்கட்டளை ,ஜே சி ஐ மற்றும் தனியார் அமைப்புகள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 75 வது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக வர்ணம் பூசிய கொடிக்கம்பங்களுக்கு புதிய தேசியக்கொடி ஏற்றி அனைவரும் மரியாதை செலுத்தினர் ‌. இராசி அமுதசுரபி அறக்கட்டளை கெளரவத் தலைவர் திமுக முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நகர வளர்ச்சி மன்ற தலைவர் வி.பாலு, அவர்கள் கலந்து கொண்டு குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி தேசத்தலைவர்கள் பற்றி சிறப்புரை ஆற்றினார்.

தொடர்ந்து தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். மேலும், இந்த விழாவில் நிர்வாக அறங்காவலர் பூபதி, முத்து சுவாமி, லட்சுமிபிரியா, புவியரசு, மற்றும் jci ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோவின் தலைவர் சதீஷ்குமார், செயலாளர் நிஜாமுதீன், ஜேகாம் சேர்மன் தமிழரசன், தேசிய உறுப்பினர்கள் சிவக்குமார், மூர்த்தி, பிரபு ,ராம், மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்வில் அபிராமி டெக்ஸ்டைல்ஸ் மணிவாசகம் துபாய் சுந்தர் உரிமையாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி குழந்தைகள், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதே போல் ராசிபுரம் சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் தேசப்பற்றுடன் 75 ஆவது குடியரசு தினம் விழா சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

Tags

Next Story