ராணுவ வீரர்கள் குடியரசு தின கொண்டாட்டம்

ராணுவ வீரர்கள் குடியரசு தின கொண்டாட்டம்

குடியரசுதின விழா


அரியலூர் மாவட்டத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்திய திருநாட்டின் குடியரசு தினம் ஜன-26 அன்று கொண்டாடபட்டது. இதனையொட்டி மல்லூர் கிராமத்தில் முன்னாள் இராணுவ வீரர்கள் தேசியகொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மேஜர் காசிமணி தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் இராணுவ வீரர்கள் தேசியகொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கபட்டது. இந்த நிகழ்ச்சியில் திருமானூர் ஒன்றிய தலைவர் கேப்டன் மூர்த்தி, திருமானூர் ஒன்றிய செயலாளர் நடராஜன், அமைப்பாளர் மனோகரன், உறுப்பினர் நடராஜன் உள்ளிட்ட முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்கத்தை சேர்ந்தோர் மற்றும் ஊர்மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story