குடியரசு தின விழா : மேயர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை

குடியரசு தின விழா : மேயர்  தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை

குடியரசு தின விழா 

குடியரசு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
நாட்டின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கொடி கம்பத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் தொடர்ந்து மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய 170 அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நற்சான்றிதழை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் அலுவலர்கள் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story