தமுமுக சார்பில் குடியரசு தின கிரிக்கெட் போட்டி

பள்ளப்பட்டியில் தமுமுக சார்பில் நடந்த குடியரசு தின கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் தமுமுக கரூர் மாவட்ட விளையாட்டு அணி சார்பில்,25-ம் ஆண்டு குடியரசு தின விழா கிரிக்கெட் போட்டி கோஷா ஸ்கூல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா கரூர் மாவட்ட தமுமுக தலைவர் ஹாஜி எஸ் எம் சாகுல் ஹமீது தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் மெடல்களும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் பிச்சை முகமது ஹாஜியார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜெய்கா ரியாஜ், மாவட்ட மக்கள் உரிமை பாதுகாப்பு அணி செயலாளர் புளோரா யூனஸ்பாய்,மாவட்ட மருத்துவ சேவை அணி பொருளாளர் கப்புலி ஆசீக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஷாஹா ரிஃபாய், பள்ளபட்டி நகர தலைவர் பீர்கலாம் அபூதாஹிர், நகர மமக செயலாளர் பூச்சி சிராஜுதீன், நகர பொருளாளர் சூலப்புரம் லுக்மான், முன்னாள் தலைவர் கம்பத்து முஸ்தஃபா மற்றும் மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் என திரளாக கலந்து கொண்டு பரிசளிப்பு விழாவை சிறப்பித்தனர்.

Tags

Next Story