குடியரசு தினம் : கொடி ஏற்றிய மாவட்ட ஆட்சியர்

குடியரசு தினம் :  கொடி ஏற்றிய மாவட்ட ஆட்சியர்

தேசிய கொடியேற்றம் 

பாளையங்கோட்டையில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் இன்று காலை குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றினார். தேசிய கீதம் முழங்கப்பட்டதை தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் திறந்த ஜீப்பில் சென்று ஏற்றுக்கொண்டார். விழாவை முன்னிட்டு மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags

Next Story