குடியரசு தின ஒத்திகை- விழாக்கோலமாக்கிய மாணவிகள்!

குடியரசு தின ஒத்திகை- விழாக்கோலமாக்கிய மாணவிகள்!

கோவை சி.எஸ்.ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடந்தது. 

கோவை சி.எஸ்.ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடந்தது.

கோவை:நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.இதன் ஒரு பகுதியாக கோவையில் வழக்கமாக குடியரசு தினத்தில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் வ.உ.சி மைதானத்திலும்,பள்ளி கல்லூரி வளாகங்களில் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி கோவையில் உள்ள பல்வேறு பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அவினாசி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் குடியரசு தின கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவிகள் குழு நடனம், தனி நபர் நடனம், வெவ்வேறு விதமான டிரில்கள்,பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை மேற்கொண்டு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story