கூடுதல் வாகனம் நிறுத்தம் அமைக்க கோரிக்கை

கூடுதல் வாகனம் நிறுத்தம் அமைக்க கோரிக்கை

வாகன நிறுத்தம் 

உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே கூடுதல் வாகன நிறுத்தம் அமைக்கவேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் மத்திய பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து குன்னூர், கோத்தகிரி, கூடலூர், உள்ளிட்ட உள் மாவட்டங்களுக்கும், கோவை, திருச்சி, சென்னை, சேலம், உட்பட வெளி மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 360 பேருந்துகள் இந்த பணிமனையில் இருந்து இயங்கி வருகிறது. இந்த நிலையில் பேருந்துக்காக வருபவர்களும் பேருந்தில் இருந்து இறங்கி செல்பவர்களுக்கும் போதுமான வாகன நிறுத்துமிடம் இல்லாததால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கூடுதலாக வாகனம் நிறுத்துமிடம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story