செவிலிமேடில் சகதியான நடைபாதை - பேவர் பிளாக் பதிக்க கோரிக்கை

செவிலிமேடில் சகதியான நடைபாதை - பேவர் பிளாக் பதிக்க கோரிக்கை

சகதியான நடைபாதை 

காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகரில் இருந்து, செவிலிமேடு மும்முனை சாலை சந்திப்பு வரையுள்ள, ஓரிக்கை மிலிட்டரி சாலை 7 கி.மீ., நீளமும், 6 மீட்டர் அகலமும் கொண்டது. கனரக வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் கீழ், 11 மீட்டர் அகலத்திற்கு சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது. இதில், செவிலிமேடில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நடைபாதையில் மண் சாலையாக உள்ளதால், மழை பெய்தால், சகதியாக மாறி விடுகிறது. இதனால், சாலையோரம் செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கி சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, நடைபாதை பகுதிக்கு, 'பேவர் பிளாக்' கற்கள் பதித்து, சாலை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story