புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டுகோள்

புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டுகோள்

செய்யூர் அருகே கொடூர் ஊராட்சிக்கு உட்பட்ட கருக்காமலை பகுதியில், புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்யூர் அருகே கொடூர் ஊராட்சிக்கு உட்பட்ட கருக்காமலை பகுதியில், புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்யூர் அருகே கொடூர் ஊராட்சிக்கு உட்பட்ட கருக்காமலை பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஏரிக்கரை அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, 20 ஆண்டுகளுக்கு முன், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. ஏரியில் உள்ள குடிநீர் கிணற்றில் இருந்து மின் மோட்டார் வாயிலாக, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்துள்ளது. மேலும், தொட்டியை தாங்கி நிற்கும் துாண்கள் விரிசல் அடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளன. ஆகையால், சேதமடைந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி முற்றிலும் இடிந்து, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு முன், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய மேல்நிலை நீர்ததேக்கத் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story