சேலம் மாநகரில் கூடுதல் கண்காணிப்பு கேமரா பொருத்த கோரிக்கை

சேலம் மாநகரில் கூடுதல் கண்காணிப்பு கேமரா பொருத்த கோரிக்கை

பைல் படம் 

சேலம் மாநகரில் கூடுதல் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநகர செயலாளர் பிரவீன்குமார் தலைமையில் நிர்வாகிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்று கொடுத்தனர். அதில், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் சட்ட விரோத மது விற்பனையை முழுமையாக தடுப்பதற்கு கூடுதல் போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும். மாநகரில் பல பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பழுதடைந்து காணப்படுகிறது. அதை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும் சமூக விரோதிகள் நடமாடும் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story