பள்ளி கழிப்பறையை சீரமைக்க கோரிக்கை !

பள்ளி கழிப்பறையை சீரமைக்க கோரிக்கை !

கழிப்பறை

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பழுதடைந்துள்ள கழிப்பறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம்,சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட வேலுார் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 40 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளியில் உள்ள கழிப்பறை செடி, கொடிகள் வளர்ந்து, பழுதடைந்து உள்ளதால் மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பழுதடைந்துள்ள கழிப்பறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story