சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரிக்கை!

சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரிக்கை!

குடிநீர் தொட்டி

சேதமடைந்த குடிநீர் தொட்டிகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விருது விளங்கினான் கிராமத்தில் சிறுமின் விசை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சிறுமின் விசை குடிநீர் தொட்டியை முறையாக பராமரிக்காததால் குடிநீர் தொட்டிகள் சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் தண்ணீருக்காக கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

சிறுமின் விசை குடிநீர் தொட்டிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைத்து , குடிநீர் வினியோகிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story