மானாமதுரையில் வாரச்சந்தை சாலையை சரிசெய்ய கோரிக்கை

மானாமதுரையில் வாரச்சந்தை சாலையை சரிசெய்ய கோரிக்கை

சந்தையில் போக்குவரத்து நெரிசல்

மானாமதுரையில் வாரச்சந்தை சாலையை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மானாமதுரையில் வாரந்தோறும் நடைபெறும் வாரச்சந்தையில் மதுரை, திருப்புவனம், சிவகங்கை, இளையான்குடி, திருப்பாச்சேத்தி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பொருட்களை வியாபாரம் செய்து வருகின்றனர்.

சந்தைக்கு மானாமதுரை சுற்றுவட்டார பகுதி மக்கள் வந்து செல்கின்ற நிலையில் வாரச்சந்தை நடைபெறும் அன்று வாரச் சந்தை வளாகத்திற்குள் போதிய இட வசதி இருந்தும் ஏராளமான வியாபாரிகள் பரமக்குடி ரோட்டின் இரு புறங்களிலும் கடைகளை அமைப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மாலை நேரங்களில் வாகனங்கள் இந்த ரோட்டை கடந்து செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.

ரோட்டை ஒட்டி கடைகள் அமைத்திருப்பதால் விபத்து அபாயமும் உள்ளது. ஆகவே வாரச்சந்தை அன்று இந்த ரோட்டை ஒருவழிப்பாதையாக மாற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story