சேதம் அடைந்த டிரான்ஸ்பார்மர் மாற்றி அமைக்க கோரிக்கை

சேதம் அடைந்த டிரான்ஸ்பார்மர்  மாற்றி அமைக்க கோரிக்கை

சேதம் அடைந்த டிரான்ஸ்பார்மர் மாற்றி அமைக்க கோரிக்கை

திண்டுக்கல் அனுமந்த நகர் மேம்பாலம் அருகே சேதமடைந்து, டிரான்ஸ்பார்மர் மாற்றி அமைக்க கோரி அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரியிடம் புகார்.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட ரவுண்ட் ரோடு புதூரில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.இங்கு அனுமந்த நகர் மேம்பாலம் அருகே சேதமடைந்து, சிமெண்ட் காரைகள் பெயர்ந்து டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதனை சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழாமல் இருக்க இரும்பு கம்பி மூலம் கட்டி வைத்துள்ளனர்.இந்த வழியாக தினமும் ஏராளமான வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகளும் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சேதம் அடைந்த நிலையில் உள்ள இந்த ட்ரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்க கோரி அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரியிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

Tags

Next Story