குளம் சீரமைப்பு பணிகள் விரைந்து முடிக்க கோரிக்கை

குளம் சீரமைப்பு பணிகள் விரைந்து முடிக்க கோரிக்கை

குளம் சீரமைப்பு

திருவள்ளூர் மாவட்டம், சின்னம்பேடு சிறுவாபுரி கோவில் குளம் சீரமைப்பு பணிகள் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், சின்னம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலின் பின்புறம் பரந்து விரந்து காணப்படும் குளம், வரலாற்று சிறப்பு மிக்க குளமாகும். அந்த குளத்தை சீரமைக்க வேண்டும் பல ஆண்டு காலமாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 2023 ஆகஸ்ட்டில் குளத்தை சீரமைக்கும் பணிகளுக்காக, 3.14 கோடி நிதி ஒதுக்கி, காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தொடர் மழை, புயல் போன்ற காரணங்களால் புதுப்பிக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த டிசம்பரில் பணிகள் துவங்கப்பட்டன. குளத்தை ஆழப்படுத்தி, குளத்தின் மத்தியில் நீராழி மண்டபம் நிறுவி படித்துறை அமைத்து சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விறுவிறு என துவங்கப்பட்ட பணிகள், இடையில் தொய்வு ஏற்பட்டது. அதன் பின் மந்தமாக பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story