வேகத்தடை அமைக்க வேண்டி வாகன ஓட்டிகள் வேண்டுகோள்

வேகத்தடை அமைக்க வேண்டி வாகன ஓட்டிகள் வேண்டுகோள்
வேகத்தடை அமைக்க வேண்டி வாகன ஓட்டிகள் வேண்டுகோள்
அச்சிறுபாக்கம் செல்லும் சாலையின் முக்கிய சந்திப்பில் வேகத்தடை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சித்தாமூர் அருகே போந்துார் கிராமத்தில், மதுராந்தகம் - சூணாம்பேடு செல்லும் மாநில நெடுஞ்சாலையில், அச்சிறுபாக்கம் செல்லும் சாலையின் முக்கிய சந்திப்பு உள்ளது. இது, இப்பகுதில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் ஒன்றாகும். தினசரி, இருசக்கர வாகனம், கார், பேருந்து மற்றும் லாரி என, நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. அச்சிறுபாக்கத்தில் இருந்து சூணாம்பேடு செல்லும் வாகனங்கள் மற்றும் மதுராந்தகத்தில் இருந்து அச்சிறுபாக்கம் செல்லும் வாகனங்கள், சாலை சந்திப்பில் பிரேக் பிடித்து நின்று, வாகனங்கள் வருகிறதா என்று பார்த்த பின்பே செல்வது வழக்கம்.

ஆனால், சாலை சந்திப்பில் வேகத்தடை இல்லாததால், அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் மற்றும் அதிவேகமாக செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் போன்ற வாகனங்கள் சில நேரங்களில் பிரேக் பிடிக்காமல், அவ்வழியாக வரும் வாகனங்களில் மோதி விபத்து ஏற்படுத்துகின்றன. ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, போந்துார் சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story